Pages

Saturday, September 1, 2012

மகரந்தத் துகள்களின் நீள் வடிவம் - 17

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 




தொடர்ச்சி...

...
எனது கவிதைகளை
எல்லோர் கால்களிலும் இடறும்படி
நான் தவறவிட்டது
அவள் கண்டெடுப்பாள் என்றுதான்

நான்
அவள் தனக்குத் தெரியாமல் தரும்
சுகங்களுக்காக
தெரிந்து தரும் வேதனைகளை
பொருத்துக்கொள்ளப் பழகிவிட்டிருந்தேன்

அவள் எனது வாசமிகுந்த நாட்களை
நுகர்ந்து கொண்டாலும்
அவளின் நினைவுகள்
எனது காலங்களை
தேன் சொட்டி நிறைத்தது

அவளின் நினைவுகளோடு நெருங்குகையில்
எந்த பட்டாம்பூச்சியும் என்னைவிட்டுப் பறந்ததில்லை
அவள்தான் முதலாமவள்

அவளோடான இன்னும் நிறையக் கனவுகளில்
இன்னொன்று கேளுங்கள்

கனவுதான்
தேவையில்லாத வெளிச்சங்களை இருட்டாக்குகிறது
மர்மங்களின் மீது வெளிச்சம் பீய்ச்சுகிறது

செடிக்கு
முதல் பூவைப் போல
அந்தக் கனவு
அவ்வளவு அழகானதாயிருந்தது

ஆம்
அவள்
கனவில் வந்திருந்தாள்

அதுவொரு அழகான முன்னிரவுப் பொழுது,

"ஏ...
நிலாப் பெண்ணே
உன் கூந்தல் எத்தனை சுவை தெரியுமா ?"

அவள்
தூங்கிக்கொண்டே சிரிக்கும் குழந்தைப் போல
வெட்கத்தால் கேள்வி செய்தாள்

நான் பதில் பிதற்றினேன்
"ஒருபோதும்
உன் கேசத்தை நீ
முத்தமிட்டிருக்க மாட்டாயல்லவா

உண்மையில் அது
மகரந்தத் துகள்களின் நீள் வடிவம்"
என்றேன்

அப்போது
இமைகளுக்குள் அவளின் கண்கள்
வெட்கப்பட்டுக்கொண்டிருந்தன

தொடரும்...

Sunday, February 19, 2012

நதியில் தவறிய துளி - 16

தொடர்ச்சி ...
கனவுகளும் நினைவுகளும் பெரும்பாலும்
வாழ்வின் எதார்த்தங்களில் இருந்து 
வெகுவாய் விலகியே இருக்கின்றன

எப்போது நினைத்தாலும் 
அருகே அமர்ந்து தலைகோதுபவள்
எப்போது கண்கள் மூடினாலும்
எனது பாதைகளின் முட்களை வருடி
பூக்கள் செய்பவள்

நிஜத்தில்
தனது வண்ணங்களை சட்டை செய்யாத
வண்ணத்துப் பூச்சியைப்போல 
என் காதலை தீண்டத்தகாததாய் பாவித்தாள்

நான் அவளை
காதலித்துக்கொண்டேயிருந்தேன்
அவள் என்னை மறுத்துக்கொண்டேயிருந்தாள்
..........

ஆனால்
வெளிச்சங்கள் அவசியமில்லாத 
வித்தியாசமான நிழல் போல
அவளின் நினைவுகள் என்னை 
தொடர்ந்துக்கொண்டிருந்தன

ஒரு பூவின் தலைக்குமேலே பறந்து
உட்காராமல் சென்றுவிடும்
வண்ணத்துப்பூச்சியைப்போல
என் காதலை தெரிந்தும் 
அவள்
பேருந்தின் ஜன்னல் வழியே தெரியும்
சுவாரசியமான காட்சியைப்போல 
பார்த்தபடி சென்றாள் 

நான் காதலில் தொலைந்தது
அவள் தேடிக்கொள்வாள்
என்ற நம்பிக்கையில்தான்

எல்லோர் கால்களிலும் இடற
நான் என் கவிதைகளை தவறவிட்டது
அவளுக்கு கிடைத்துவிடும்
என்ற நம்பிக்கையில்தான்

ஒவ்வொரு முறையும் 
பரிகசிக்கப்படும் என் காதலை
இறந்த எறும்பை இழுத்துச்செல்லும் 
இன்னொரு எறும்பென பற்றிவருவது 
வாடிக்கையாயிருந்தது எனக்கு

நான் உணர்ந்த ஏகாந்தம் 
எனக்குள்ளிருந்தது காதல்
என்றறிந்த நாளோடு நின்றுவிட்டது

நானுணர்ந்த சுகம்
கவிதைகளைப் பூசிக்கொண்டு
தொடர்ந்துவருகிறது

அவள்தான் என்னை
தீச்சருகுகளில் மீட்டு 
பூக்களுக்குள் புதைத்தாள்

இனிமை முலாம் பூசியிருந்த 
என் வாழ்க்கையை
நிஜமாகவே இனிமையாக்கியது
அவள்தான் 

( தொடரும் )....




Tuesday, February 14, 2012

நதியில் தவறிய துளி - 15

தொடர்ச்சி...

இல்லை
என்னையுனக்கு கொடுக்கவேயில்லை


....


நான் உனக்கானவன்
உனக்கான ஒன்றை
உனக்கே கொடுப்பதெப்படி ?

.....
மௌனம்...

பிறகு
அவளே அவளின் மௌனத்தில்
கல்லெறிந்தாள்
அது
நிலவின் மேல் மேகத்தை
பிய்த்து எரிந்ததைப் போல இருந்தது


என்னை
மன்னித்துவிடுங்கள்...


மன்னிக்கவா
எதற்கு ?


உங்களை புரியாமல்
எரிந்துக் கிடந்தேனே
மாடத்தின் மேல் அனல் துப்பும்
விளக்காய்
இருந்தேனே

அதற்க்கு.

அடி சகி.,
நீ கேட்டு இல்லையெனக்கூடாது
அதனால் மன்னிக்கிறேன்


ஆனால்
நீ வெறுப்பதர்க்கேனும்
புரிந்திருந்ததால்தான் அப்போது
நான் வாழ்ந்திருந்தேன்

..........
.........................
......
.................


இப்படியெல்லாம்
ஒரு ஏகாந்தம் என் நாட்களில்
நிகழவே கூடாதா

இது என்ன
என் காதலில் மட்டும்
இலையுதிர்க் காலத்திற்குப் பிறகு
வேருதிர்க்காலமா ???

என்றெல்லாம்
மருகினாலும்


இதுபோன்ற
கனவுகளும் நினைவுகளும்
எப்போதும் என்னில் குறையாமலேயே இருந்தது

மேகங்கள் கடக்கையில்
சருகுகள் அசைத்து சமிக்ஞை செய்யும்
இலையுதிக்கால மரம் போல

விலகிச்செல்லும்
அவளிடமிருந்து என் காதலின் பச்சயம் கெடாமல்
பார்த்துக்கொள்வது
இப்படியான கனவுகளும் நினைவுகளும்தான்

இன்னும் சொல்வதானால்
ஒரு பூஞ்செடியின் அடியில் வாழும்
எறும்பைப்போல
அவளின் நினைவுகளோடு
வாழ்ந்துக்கொண்டிருந்தேன்

பெரு மழையில்
மொட்டின் மீது மோதிச்சிலிர்க்கும்  துளியைப்போல
மறுத்துச்செல்லும் அவளோடான
நியாபக வாழ்க்கையில்
சுகிக்க முடிகிறது என்னால்


நான் அழகாகிப்போனேன்
என்னுள்ளிருந்த பெண்மை உணர்ந்தேன்
மகிழ்வுக்கும் எனக்குமான தூரம் குறைந்தது
......
இன்னும் இன்னும்....

ஆனால்
என்னை அவளுக்கு உணர்த்துவதிலேயே
என் காதலின் ஈரமெல்லாம்
தீர்ந்துப்போகுமோ என்றும்
ஆழ்ந்திருந்தேன் ....

 ( தொடரும் )...





Monday, February 6, 2012

நதியில் தவறிய துளி - 14


தொடர்ச்சி ...


வேண்டாம் கண்ணே 
நீ உணர்த்த வேண்டாம் 
நீ கடனாளியுமல்ல

நீ உணர்த்தமுடியவில்லை 
என்று உணர்த்திய 
உன் உணர்வுகளுக்காகவே நான் 
நட்சத்திரங்களை விடவும்
ஒன்று கூடுதலாக கவிதை எழுதவேண்டும்

தாயின் மார்புகள்
கணத்திருப்பதை உணராமல் 
பாலருந்த மறுக்கும் குழந்தையைப் போல 
நான் உன்னை உணராமல்
என்னையே உணர்த்திக்கிடந்தேன்

நீ புத்தகம் என்பதுப் புரியாமல்
வெள்ளைத் தாளென
உன்னில் என்னைக் கிறுக்கிக் கிடந்தேன்

இனி அப்படியிருக்காது...

போதும்
நான் உங்களை வருத்திவிட்டேனா ?

இல்லையடி
ஆனால் திருத்தியிருக்கிறாய்
இனி
நீ பேசு
நான் கேட்டுக்கிடக்கிறேன்
நீ கேள் 
நான் சொல்லிக்கிடக்கிறேன்

அதிகம் வளர்ந்த 
நகத்தையும், நாணத்தையும் களைவது
வருத்துவதாகாது

உன் அன்பிற்கு 
அநேகமாய் நான் என்னையே கொடுத்தாலும்
அது பெரிதென இருக்காது

என்ன ?
அப்படியானால்
இதுவரை உங்களை எனக்கு
கொடுக்கவே இல்லையா...

கள்ளி .,

அதெல்லாம் இல்லை
சொல்லுங்கள்
உங்களை எனக்கு கொடுக்கவே இல்லையா ?

அவள் 
என் பதிலை யூகிக்கமுடியாதவள் அல்ல 
ஆனாலும்
நானாக சொல்லவேண்டுமென்று
கேட்டாள்...

அதற்க்கு நான் 

ஆம்
என்னை உனக்கு கொடுக்கவேயில்லை
என்றேன். ?!

( தொடரும் )...

Monday, January 30, 2012

நதியில் தவறிய துளி - 13

தொடர்ச்சி
என்னவளே
நான் கொடுத்துவைத்தவன் 

எதற்க்காக
அப்படிச் சொல்கிறீர்கள்

உண்மைதானடி

நீருக்கு தவித்திருந்த பயிர்களுக்கு
வேர்களில் பொழிந்துவிட்ட
மழையைப் போல் 

ஆனால் நான் 
தாபத்தில் தவிக்கும் முன்பே 
நீஎனக்கு காதல் மழை பொழிந்தாய் 

நான் உன்னை கண்டபின்தான்
கண்களுக்கு பார்வை 
அவசியமென்று உணர்ந்தேன்

எதற்க்காக என்னை
கடனாளியாக்குகிறீர்கள்

என்ன 
கடனாளியாகவா 

ஆம்

நீங்கள்
தொடாமலேயே முத்தமிட்டதாய்
உணர்த்த உங்களுக்கு 
உங்களின் நெகிழ்ந்த வார்த்தைகள்
போதுமாயிருக்கிறது

ஆனால்
உங்கள் புலன்களனைத்திலும்
நான் புழங்குவதாகச் சொல்கிறீர்கள்
என்னால் உங்களுக்கு 
அப்படி முடியவில்லை

எத்தனை முறை 
திடுக்கிட்டெழுந்தாலும் 
இரவில் என்னை 
உறக்கத்திற்கு பதில்
உங்கள் வார்த்தைகள்தான்
தழுவிக்கொண்டிருப்பதாய்
தோன்றுகிறது

இத்தனைக் காலம்
உங்களை உதாசினத்துக் கிடந்தததில்  
வாழ்க்கை என்னை
விலக்கியிருந்ததை
புரியாமல் கிடந்தேன்

தன்னுடைய அவஸ்த்தையை
வண்டிற்கு உணர்த்தத் துடிக்கும்
பூவைப் போல

நீங்கள் என் மீதுக் கவிழ்த்த
சுகங்களின் அலாதியை
நான் உங்களுக்கு உணர்த்த முடியவில்லை

அதனால் தான்
சொல்கிறேன்
என்னை கடனாளியாக்காதிர்கள்....

( தொடரும் )...


Friday, January 20, 2012

நதியில் தவறிய துளி - 12

தொடர்ச்சி...
பின்

அவள் கேட்டுக்கொண்டாள்
உங்களின்
கடைசி இரவிற்கு முன்னமே
என்னை
விழி மூடச் செய்யுங்கள்

எனக்கது
போரில் புன்பட்டவனுக்கு
நாட்டின் தோல்விச் செய்தி 
கேட்டதைப்போல இருந்தது

நான் பிரிந்து
அவளா
அவள் பிரிந்து
நானா

காதல் பிரிந்து 
மௌனமா 
சிறகுகள் பிரிந்து
பறத்தலா...

இல்லை
கண்ணே

இறப்பு என்பது எப்படி உண்மையோ
நம் காதல்
அதைவிட உண்மையானது 
என்பதும் உண்மையே

அது
நம்மை
நாமாக இருக்கும் போதே
இறக்கவைக்கும்...

அதிகாலை புல்லின்
பணித்துளியைப்போன்று
அவளின்
இமைகள் அரும்பியிருந்தன

அவள் 
என் நெஞ்சில் சாய்ந்தாள்
என் நெஞ்சு 
அவளின் முதுகு சாய்ந்தது

அப்போது
துள்ளிவந்த அலையின்
ஒரு முடிச்சு
எங்கள் மீது
விழுந்து அவிழ்ந்தது

பார்த்தாயா உயிரே
வாழ்வினுள் செல்லும் நமக்கு
கடல் வாழ்த்துச் செய்தி
அனுப்பியிருக்கிறது

இல்லை
நான் அதனை பார்க்கவில்லை
அந்த உப்பு நீர்
என் கண்ணீருக்கு முன்
உங்கள் மார்பை நனைத்திடுமோ
என்று அஞ்சியிருந்தேன்

அதனால்
நானதை பார்க்கவில்லை...

சொல்லுங்கள்
நான் என்ன பேசியிருக்க முடியும்
என்னதான் பேசியிருக்க முடியும்

இந்த தூறல்
விழுந்ததிற்கே
தன்
பிரவாகம் ததும்பியதாக 
சொல்லுகிறாளே

நான்
என்னதான் செய்துவிடமுடியும்

அலையின் விளிம்பொன்று
என் விரல்களைமட்டும்
நனைத்துவிட்டுப் போனது...

( தொடரும் )...




Wednesday, January 18, 2012

நதியில் தவறிய துளி - 11

தொடர்ச்சி...
படித்து வந்தாயா
எனும் ஆசிரியரிடம்
மாணவனின் மௌனம்
பல வார்த்தைகள் பேசக்கூடும்

வண்டுகளிடம்
பூக்களின் மௌனம்
வெட்கம்

ஆனால்
இங்கே

அவளின் மௌனம்
அவள் நெகிழ்ந்திருப்பதை 
சொல்லியது

என்னதான்
மௌனம்
சுகமானதென்றாலும்

அவளின்
சிவந்தப் பேச்சின்
சௌந்தர்யம்
வேறேதனில் வந்துவிடக்கூடும்

அதனால்...

பூவிதழ்களை
சிறகசைப்பில் களை(லை)க்கும்
வண்ணத்துப் பூச்சியைப்போல 
நானந்த
மௌனத்தைக் களை(லை)த்தேன்

அடி சகி
ஒரு மெழுகைப்போல 
நீ உருகுவது
எனக்குப் புரிகிறது

ஆனால்
நீ உருகினால் 
எனக்கு வெளிச்சம் வருமா
புரியாதா...

அப்படியானால்
நான் உருகுவது
உங்களுக்கு இருளைத் தருகிறதா

இல்லையில்லை 
அப்படியில்லை

விம்மும் குழந்தையிடம்
எந்த தாயும்
உருகிக்கொண்டிருப்பதில்லை 
என்பதை உணர்த்தினேன்
அவ்வளவுதான்...

அவளென்
விரல் தொட்டாள்

என் ஒவ்வொரு செல்லிலும்
கூடு கட்டியிருந்த
கூட்டுப்புழுக்கள்
கூடு கிழித்து
சிறகசைப்பதாய் உணர்ந்தேன்

( தொடரும் )...